இந்தியா

நடுக்கடலில் வெடித்த எரிமலை ஊருக்குள் புகுந்த கடல்-சுனாமி அபாயம்

புதுதில்லி,ஜன.15- பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவில் கடலில் உள்ள எரிமலை வெடிக்கத் துவங்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் டோங்கா கடல் பகுதிக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சனிக்கிழமையன்று அதிகாலை சுமார் 3.10 மணியளவில் ஏஇடிடி( AEDT) எரிமலை தீவான ஹங்கா-டோங்கா-ஹுங்கா-ஹாபாயின் பகுதியில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைநகர் நுகுஅலோபாவில் 1.2 மீட்டர் உயரத்திற்கு சுனாமி ஏற்பட்டது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் கடல்நீர் புகுந்தது. சமூக வலைதளங்களில் அலைகள் ஆக்ரோஷத்துடன் பாயும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து சுனாமி ஆய்வாளர் ஆண்ட்ரூ கிஸ்சிங் கூறுகையில், “மேலும் எரிமலை வெடிப்புகள் நிகழ லாம். கடலுக்கு அருகே வீடுகளும், உணவ கங்களும், ஹோட்டல்கள் இருப்பது கவலை யளிக்கிறது. சுனாமி தாக்க வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button