கீழடி 8-ம் கட்ட அகழாய்வினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை: தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை சார்பில் இன்று தொல்பொருள் ஆராய்ச்சியில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் கீழடியின் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
2021&2022ஆம் ஆண்டு ஏழு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவங்ககை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் & மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகள் இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு தொல்லியல்முறை தொடங்கவுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015ம் ஆண்டு 3 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 4 ஆம் கட்ட அகழாய்வில் இருந்து இது வரை 18,000-க்கும் அதிகமான பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தமிழர்கள் வரலாறு மிகவும் தொன்மையானது எனக் கண்டறிப்பட்டுள்ளது. இதனால் கீழடியில் தொடர்ந்து அகழாய்வுப் பணி நடத்தத் தொல்லியல் துறை நடைவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.